Monday 13 May 2013

'நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!

''நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி!''

'‘எங்களுக்கு 18 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. எல்லாம் 25 வயது-டைய மரங்கள். அதனுள் ஊடு-பயிராக வேறு சில மரங்களை நட விரும்புகிறோம். தகுந்த வல்லுநரிடமிருந்து அதற்-கான நேரடி ஆலோச-னைகள் கிடைக்-குமா?’’ என கடிதம் அனுப்பி இருந்தனர் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையை அடுத்துள்ள தளிஜல்லிப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர்.
இவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்காக பொள்ளாச்சி, மலையாண்டிப்பட்டணத்-தைச் சேர்ந்த 'இயற்கை வழி வேளாண்மை' நிபுணர் மது. ராமகிருஷ்ணனை அழைத்துச் சென்றோம்.
‘‘ஊடுபயிரா வாழை வைக்கக்கூடாதுனு சொல்றது தப்பு. வாழைக்கு எடுக்க மட்டுமில்ல, கொடுக்கவும் தெரியும். அதனால தாராளமா வாழையை வைக்கலாம். அதோட சூபாபுல், சவுண்டல், செடிமுருங்கை, பாக்கு, கோகோனு எதை வேணும்னாலும் ஊடுபயிரா நடலாம்'' என்று சொன்ன வல்லுநர், ''காத்தை அறுவடை செய்றதுதான் இயற்கை வேளாண்மையில தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான யுக்தி’’ என்றதும், 
உலராமல் இருக்க உயிர்வேலி அவசியம்!
'‘காத்து, அது போற இடத்துல இருக்கற ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காத்து, ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை. சவுண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும். வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈரப்பதத்-தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்-காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது.


நன்றி பசுமை விகடன், 10-செப்டம்பர், 2009.
www.sreekaviyafarms.blogspot.com
உயிர் வேலி

0 comments:

Post a Comment