Wednesday 19 June 2013

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளப் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும். இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை மற்றும் இந்த முறை இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாசன முறையாக உள்ளது. வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது. வெள்ளைப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் ஆவியாதல் வழிந்தோடும் நீர், நீர் உள்ளீர்ப்பு மற்றும் நீராவியாதல் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
மற்ற முறைகளைப் போன்று வெள்ளநீர்ப்பாய்ச்சல் முறை அதிக அளவு பயன்பாட்டில் இல்லையெனினும், கீழ்க்கண்ட உத்திகளைக் கையாண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்


இம்முறையில் புவி ஈர்ப்பு விசை மூலமாகவே நீர் செலுத்தப்படுகிறது. ஆகையால் மேடான நிலங்களுக்குச் செல்வது கடினம் எனவே நிலம் நன்கு சமப்படுத்தப்படுதல் அவசியம்

அடுக்கு அலை நீர்பாய்ச்சல்


நீரை முழுவதும் சமப்படுத்திய நிலத்தில் ஒரே நேரத்தில் விடுவதை விட குறிப்பிட்ட கால இடைவெளியில் பாய்ச்சுவது மிகுந்த பயனளிக்கும்

மண் அரிப்பு சுழற்சி நிலப்பரப்பு பள்ளமாக இருக்கும் இடங்களில் அதிக நீர் என்று தேங்கியிருக்கும். அவ்வப்போது இந்நீரை மேடான இடங்களுக்கு இறைத்து ஊற்றினால் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகும்
பொதுவாக வெள்ளநீர்ப்பாசன முறையில் வயல் முழுவதும் நிறையும் வரை நீர்ப்பாய்ச்சுதல் செய்வர். இவ்வாறு செய்யும்போது மண் வகையைக் கவனிக்க வேண்டும். களிமண் போன்ற மண் வகைகளில் நீர் ஊடுருவுதல் குறைவு. இத்தகு சூழ்நிலையில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பகள் அதிகம். அதோடு வேர்மண்டலத்தைத் தாண்டி வெகு ஆழத்தில் சென்று விட்ட நீரினால், பயிருக்குப் பலனேதும் இல்லை

அடுக்கு நீர் முறையில் மண் ஈரப்பதம் அளவிடும் கருவிகள் பாசனத்திற்கு சரியான அளவீடுகளைக் கொடுக்கின்றன. இக்கருவிகள் நீர் குறிப்பிட்ட அளவை (மண்ணிற்கு தேவையான ஈரப்பதத்தை) அடைந்தவுடன் அதைக் குறியிட்டுக் காட்டி விடும். அதற்கு மேல் பாய்ச்சும் நீர் கீழே சென்று நீருடன் கலந்து விடும். இதைப் பயன்படுத்தி சரியான அளவு நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

0 comments:

Post a Comment